Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 28, 2012

சற்று இளைப்பாற பழமொழிகள் சில

சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...

பழமொழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அன்பாக பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.

  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • இ, ஈ

    • இக்கரைக்கு அக்கரை பச்சை.
    • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
    • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
    • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
    • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
    • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
    • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
    • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
    • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
    • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
    • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
    • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
    • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
    • இராச திசையில் கெட்டவணுமில்லை
    • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
    • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
    • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
    • இருவர் நட்பு ஒருவர் பொறை.
    • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
    • இல்லது வாராது; உள்ளது போகாது.
    • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
    • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
    • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
    • இளங்கன்று பயமறியாது
    • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
    • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
    • இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
    • இறங்கு பொழுதில் மருந்து குடி.
    • இறுகினால் களி , இளகினால் கூழ்.
    • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
    • இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
    • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
    • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
    • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
    • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
    • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
    • ஈர நாவிற்கு எலும்பில்லை.
    • ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.

    உ, ஊ

    • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
    • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
    • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
    • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
    • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
    • உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
    • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
    • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
    • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
    • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
    • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
    • உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
    • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
    • உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
    • உரம் ஏற்றி உழவு செய்
    • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
    • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
    • உலோபிக்கு இரட்டை செலவு.
    • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
    • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
    • உளவு இல்லாமல் களவு இல்லை.
    • உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
    • உள்ளது போகாது இல்லது வாராது.
    • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
    • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
    • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
    • ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
    • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
    • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
    • ஊண் அற்றபோது உடலற்றது.
    • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
    • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
    • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
    • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
    • ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
    • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
    • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

    எ, ஏ

    • எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
    • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
    • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
    • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
    • எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
    • எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
    • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
    • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
    • எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
    • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
    • எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
    • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
    • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
    • எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
    • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
    • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
    • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
    • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
    • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
    • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
    • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
    • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
    • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
    • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
    • எலி அழுதால் பூனை விடுமா?
    • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
    • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
    • எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
    • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
    • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
    • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
    • எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
    • எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
    • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
    • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
    • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
    • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
    • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
    • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
    • எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
    • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
    • எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
    • எறும்புந் தன் கையால் எண் சாண்
    • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
    • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
    • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
    • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
    • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
    • ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
    • ஏழை என்றால் எவர்க்கும் எளிது
    • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
    • ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
    • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

    ஐ, ஒ, ஓ, ஒள

    • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
    • ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
    • ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
    • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
    • ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
    • ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
    • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
    • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
    • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
    • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
    • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
    • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
    • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
    • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
    • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
    • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
    • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
    • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
    • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
    • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
    • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
    • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
    • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
    • ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
    • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
    • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
    • ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
    • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
    • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
    • ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
    • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
    • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
    • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
    • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
    • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

    • கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
    • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
    • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
    • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
    • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
    • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
    • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
    • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
    • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
    • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
    • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
    • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
    • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
    • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
    • கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
    • கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
    • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
    • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
    • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
    • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
    • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
    • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
    • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
    • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
    • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
    • கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
    • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
    • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
    • கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
    • கண் கண்டது கை செய்யும்.
    • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
    • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
    • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
    • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
    • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
    • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
    • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
    • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
    • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
    • கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
    • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
    • கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
    • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
    • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
    • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
    • கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
    • கரணம் தப்பினால் மரணம்.
    • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
    • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
    • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
    • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
    • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
    • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
    • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
    • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
    • கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
    • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
    • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
    • கல்வி அழகே அழகு.
    • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
    • கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
    • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
    • கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
    • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
    • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
    • கள்ள மனம் துள்ளும்.
    • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
    • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
    • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
    • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
    • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
    • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
    • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
    • கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
    • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
    • கனிந்த பழம் தானே விழும்.
    • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
    • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

    கா

    • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
    • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
    • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
    • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
    • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
    • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
    • காணி ஆசை கோடி கேடு.
    • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
    • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
    • காப்பு சொல்லும் கை மெலிவை.
    • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
    • காய்த்த மரம் கல் அடிபடும்.
    • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
    • காரண குருவே காரிய குரு!
    • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
    • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
    • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
    • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
    • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
    • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
    • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
    • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
    • காலைக் கல்; மாலைப் புல்
      • "காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து.
    • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
    • காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
    • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
    • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
    • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

    கி, கீ

    • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
    • கிட்டாதாயின் வெட்டென மற
    • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
    • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
    • கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
    • கீர்த்தியால் பசி தீருமா?
    • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

    கி, கீ, கு, கூ

    • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
    • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
    • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
    • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
    • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
    • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
    • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
    • குணத்தை மாற்றக் குருவில்லை.
    • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
    • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
    • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
    • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
    • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
    • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
    • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
    • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
    • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
    • குரங்கின் கைப் பூமாலை.
    • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
    • குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
    • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
    • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
    • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
    • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
    • குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
    • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
    • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
    • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
    • குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
    • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
    • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
    • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
    • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
    • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
    • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
    • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
    • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
    • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
    • கூழும் சிந்தல, கோப்பையும் உடையல

    கெ

    • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
    • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
    • கெடுவான் கேடு நினைப்பான்
    • கெட்டாலும் செட்டி செட்டியே,
    கிழிந்தாலும் பட்டு பட்டே.
    • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
    • கெட்டும் பட்டணம் சேர்
    • கெண்டையைப் போட்டு வராலை இழு.
    • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
    • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

    கே

    • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
    • கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
    • கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
    • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
    • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
    • கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

    கை

    • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
    • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
    • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
    • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
    • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
    • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
    • கையிலே காசு வாயிலே தோசை
    • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
    • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
    • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

    கொ

    • கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
    • கொடிக்கு காய் கனமா?
    • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
    • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
    • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
    • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
    • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
    • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
    • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
    • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
    • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
    • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
    • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

    கோ

    • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
    • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
    • கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
    • கோடி வித்தையும் கூழுக்குத்தான்
    • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
    • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
    • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
    • கோபம் சண்டாளம்.
    • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
    • கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
    • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
    • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
    • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
    • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
    • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
    • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

    ச, சா, சி, சீ

    • சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
    • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
    • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
    • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
    • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
    • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
    • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
    • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
    • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
    • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
    • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
    • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
    • சாண் ஏற முழம் சறுக்கிறது.
    • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
    • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
    • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
    • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
    • சித்திரையில் செல்வ மழை.
    • சிறுதுளி பெரு வெள்ளம்.

    சு, சூ

    • சுக துக்கம் சுழல் சக்கரம்.
    • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
    • சுட்ட சட்டி அறியுமா சுவை.
    • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
    • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
    • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
    • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
    • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
    • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
    • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
    • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
    • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
    • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
    • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

    செ, சே, சை

    • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
    • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
    • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
    • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
    • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
    • செயவன திருந்தச் செய்.
    • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
    • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
    • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
    • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
    • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
    • சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
    • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
    • சேற்றிலே செந்தாமரை போல.
    • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

    சொ, சோ

    • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
    • சொல் அம்போ வில் அம்போ?
    • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
    • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
    • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
    • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
    • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
    • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
    • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
    • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
    • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
    • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
    • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

    • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
    • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
    • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
    • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
    • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
    • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
    • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
    • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
    • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
    • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
    • தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
    • தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
    • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
    • தருமம் தலைகாக்கும்.
    • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
    • தலை இருக்க வால் ஆடலாமா ?
    • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
    • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
    • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
    • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
    • தவளை தன் வாயாற் கெடும்.
    • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
    • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!

    தா

    • தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
    • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
    • தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
    • தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
    • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
    • தானத்தில் சிறந்தது நிதானம்
    • தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

    து

    • துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
    • துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை

    தை

    • தை பிறந்தால் வழி பிறக்கும்
    • தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்

    • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
    • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
    • நடந்தவன் காலிலே சீதேவி இருந்தவன் காலிலே மூதேவி
    • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
    • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
    • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
    • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
    • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
    • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
    • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
    • நயத்திலாகிறது பயத்திலாகாது.
    • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
    • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
    • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
    • நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
    • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
    • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
    • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
    • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
    • நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

    நா

    • நா அசைய நாடு அசையும்.
    • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
    • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
    • நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
    • நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
    • நாய் இருக்கிற சண்டை உண்டு.
    • நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.
    • நாய் விற்ற காசு குரைக்குமா?
    • நாலாறு கூடினால் பாலாறு.
    • நாள் செய்வது நல்லார் செய்யார்.
    • நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.

    நி, நீ

    • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
    • நித்திய கண்டம் பூரண ஆயிசு.
    • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
    • நித்திரை சுகம் அறியாது.
    • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
    • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
    • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
    • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
    • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
    • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
    • நீர் மேல் எழுத்து போல்.
    • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
    • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

    நு, நூ, நெ, நே, நை, நொ, நோ

    • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
    • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
    • நூல் கற்றவனே மேலவன்.
    • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
    • நூற்றைக் கொடுத்தது குறுணி.
    • நெய் முந்தியோ திரி முந்தியோ.
    • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
    • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
    • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
    • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
    • நேற்று உள்ளார் இன்று இல்லை.
    • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
    • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
    • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
    • நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
    • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
    • நோய்க்கு இடம் கொடேல்.

    • துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
    • பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
    • பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
    • பக்கச் சொல் பதினாயிரம்.
    • பசியுள்ளவன் ருசி அறியான்.
    • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
    • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
    • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
    • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
    • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
    • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
    • படையிருந்தால் அரணில்லை.
    • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
    • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
    • பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
    • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
    • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
    • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
    • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
    • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
    • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
    • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
    • பணம் உண்டானால் மணம் உண்டு.
    • பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
    • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
    • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
    • பதறாத காரியம் சிதறாது.
    • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
    • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
    • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
    • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
    • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
    • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
    • பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
    • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
    • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
    • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
    • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
    • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
    • பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
    • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
    • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
    • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
    • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
    • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
    • பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
    • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
    • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

    பா

    • பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
    • பாம்பின் கால் பாம்பறியும்.
    • பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது
    • பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!

    பு, பூ

    • புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி
    • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
    • புத்திமான் பலவான்.
    • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
    • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
    • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
    • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
    • பூவிற்றகாசு மணக்குமா?
    • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

    பெ, பே

    • பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
    • பெண் என்றால் பேயும் இரங்கும்.
    • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
    • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
    • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
    • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
    • பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
    • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
    • பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
    • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
    • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
    • பேசப் பேச மாசு அறும்.
    • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
    • பேராசை பெருநட்டம்.
    • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

    பொ, போ

    • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
    • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
    • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
    • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
    • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
    • பொறுமை கடலினும் பெரிது.
    • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
    • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
    • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
    • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
    • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

    • மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
    • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
    • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
    • மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    • மண்டையுள்ள வரை சளி போகாது.
    • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
    • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
    • மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
    • மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
    • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
    • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
    • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
    • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
    • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
    • மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
    • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
    • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
    • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
    • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
    • மவுனம் கலக நாசம்
    • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
    • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
    • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
    • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
    • மனம் உண்டானால் இடம் உண்டு.
    • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
    • மனம் போல வாழ்வு.
    • மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
    • மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

    மா

    • மாடம் இடிந்தால் கூடம்.
    • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
    • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
    • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
    • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
    • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
    • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
    • மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
    • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
    • மாரடித்த கூலி மடி மேலே.
    • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
    • மாரி யல்லது காரியம் இல்லை.
    • மாவுக்குத் தக்க பணியாரம்.
    • மாற்றானுக்கு இடங் கொடேல்.
    • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
    • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

    மு

    • முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
    • முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

    யா

    • யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
    • யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.
    • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
    • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
    • யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?

    மி, மீ, மு, மூ

     மின்னுவதெல்லாம் பொன்னல்ல
    
    • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
    • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
    • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
    • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
    • மீ தூண் விரும்பேல்.
    • முகத்துக்கு முகம் கண்ணாடி
    • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
    • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
    • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
    • முதல் கோணல் முற்றுங் கோணல்
    • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
    • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
    • முருங்கை பருத்தால் தூணாகுமா?
    • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
    • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
    • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
    • முன் ஏர் போன வழிப் பின் ஏர்
    • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
    • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
    • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
    • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
    • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
    • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
    • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
    • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

    மெ, மே, மொ, மோ,மெள

    • மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
    • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
    • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
    • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
    • மொழி தப்பினவன் வழி தப்பினவன்
    • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
    • மெளனம் மலையைச் சாதிக்கும்.
    • மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

    வ-வே

    • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
    • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
    • வடக்கே கருத்தால் மழை வரும்.
    • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
    • வணங்கின முள் பிழைக்கும்.
    • வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
    • வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
    • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
    • வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
    • வருந்தினால் வாராதது இல்லை.
    • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
    • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
    • வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
    • வளவனாயினும் அளவறிந் தளித்துண்
    • வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
    • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
    • வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
    • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
    • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
    • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
    • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
    • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
    • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
    • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
    • விரலுக்குத் தகுந்த வீக்கம்.
    • விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
    • விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
    • விதி எப்படியோ மதி அப்படி.
    • வித்தைக்கு அழிவில்லை.
    • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
    • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
    • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
    • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
    • விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
    • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
    • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
    • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
    • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
    • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
    • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
    • வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
    • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
    • வேலிக்கு ஓணான் சாட்சி.
    • வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
    • வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!
    • வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

    இணையத்திலிருந்து
  • Engr.Sulthan

No comments:

Post a Comment