சைக்கிள் பெடலை சுற்றினால் இயங்கும் ஜூஸ் கருவியை சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் அட்சய், சுபம்தார் திவேதி, சவுரப் வஸ்தவா, கஜேந்திர பத்வா ஆகியோர் சேர்ந்து சைக்கிள் பெடலை இயக்கினால் சுற்றும் ஜூஸ் கருவியை வடிவமைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:
எல்லாவற்றுக்கும் நாம் மின்சாரத்தை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அதே நேரம், மின்தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு வகைகளிலும் ஆற்றல் வீணாகாமல் சேமிக்க வேண்டியது அவசியம்.